search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் விஜயலட்சுமி"

    டிஜிட்டல் முறைக்கு மாறாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், மத்திய அரசின் டிராய் விதிமுறைகளின்படி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் விரும்பிய சேனலை தேர்வு செய்து பார்க்கும் முறையை நடைமுறைப் படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அணுகி அதற்கான படிவங்களை பெற்று தங்களுக்கு தேவையான சேனலை பூர்த்தி செய்து கொடுத்து பயனடையலாம். மேலும், அனலாக் சிஸ்டம் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி.ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஒழுங்கு முறைச்சட்டத்தின்படி உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனலாக் சிஸ்டத்தை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

    அவ்வாறு டிஜிட்டல் முறைக்கு மாறாமல் அனலாக் முறையில் வழங்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி செயல்படும் கேபிள் டி.வி.ஆபரேட்டர் களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கேபிள் டி.வி.உபகரணங் களும் பறிமுதல் செய் யப்படும்.

    எனவே, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.
    அரியலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தேர்தல்- 2019 தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்திட அனுமதிக்கப்பட்ட மைதானங்கள் மற்றும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பயன்படுத்த அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது பிற கட்சியினர் மற்றும் அவர்களது வேட்பாளர்களின் கொள்கைகள், முந்தைய செயல்பாடுகள் மற்றும் வேலைகள் ஆகியவற்றை மட்டுமே விமர்சிக்கலாம். தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து காவல் துறையினருக்கு முன்பே தெரிவித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் தடை ஏதும் முன்பே விதிக்கப்பட்டிருப்பின் அதை பின்பற்ற வேண்டும்.

    மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையில்லை. வெள்ளம், பஞ்சம் அல்லது இன்ன பிற இயற்கை இடர்பாடு காலங்களில் துயர்துடைப்பு பணி செய்திட தடையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தல் ஆணைய முன்அனுமதியுடன் பண உதவி செய்வதற்கும் தடை இல்லை.

    அலுவலக பணிகளோடு தேர்தல் பிரசார பணிகளை இணைக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வேறு சில வழிகளிலோ தூண்டுதல் கூடாது. வாக்காளர்களிடையே ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்ய கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 

    கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அன்று ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் முற்பகலில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடனும், நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    அரியலூர்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி 774 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 

    அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை சிறப்பாக செய்வதற்கும், அங்கன்வாடி பணியார்களிடம் இருந்து துல்லியமாக அறிக்கைகளை பெறவும், திட்ட சேவைகளை உரிய நேரத்தில் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்மார்ட்’ போனில் சி.ஏ.எஸ். என்கிற செயலி உள்ளது. அதன் மூலமாக அங்கன்வாடி பணியாளர்கள் குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வைத் திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணை உணவு, தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, மாதாந்திர முன்னேற்ற அறிக்கை போன்ற அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) (பொறுப்பு) புவனேஸ்வரி, உதவித்திட்ட அலுவலர் அன்பரசி, போஜன்அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 40 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும், 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகளையும், 2 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 5 பேருக்கு கைக்கடிகாரம் மற்றும் கருப்பு கண்ணாடிகளையும், 22 பேருக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக்கருவிகளையும், 29 பேருக்கு திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும் என மொத்தம் 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

    முன்னதாக சிறப்பாக பணியாற்றிய அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை முட நீக்கியியல் டாக்டர்கள் கொளஞ்சிநாதன், மணிகண்டன், பிரவீன் ஆகியோரை பாராட்டி, நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் ஹெலன் ஹெல்லர் காது கேளாதவர் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி (பொறுப்பு) காமாட்சி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) (பொறுப்பு) லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட தொழில் மைய அலுவலர் சகுந்தலா, முடநீக்கு வல்லுனர் ராமன், கொல்லாபுரம் ஹெலன்ஹெல்லர் காதுகேளாதோர்க்கான சிறப்பு பள்ளி சகோதரி லில்லிகேத்ரின் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஆறாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 09.11.2018 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (தெ), காட்டகரம்(தெ) ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறையிலும், ஆண்டிமடம் வட்டத்தில் இடையக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே   பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. 

    இதேபோல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந்தேதி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

    போட்டிகளில் முதல் இடம் பிடிப்பவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
    அரியலூர்:

    வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள உடைகள், போர்வைகள், மெழுகுவர்த்தி, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், மருந்து பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களான நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத் தார். 

    அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயா, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) விக்டோரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #keralarain
    வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இ-சேவை மையங்களில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் தாமாகவே ஸ்மார்ட் போன் மற்றும் இணையதளம் வழியாக சான்றிதழ்களை எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களையும் www.tnes-ev-ai.tn.gov.in என்ற இணைய தளத்தில் சென்று தாமாகவே விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகளை tnes-ev-ai.tn.gov.in/user-m-a-nu-al.html என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

    மேலும், மத்திய அரசின் UM-A-NG என்ற செயலியை ஆண்டிராய்டு போனில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் ஆகிய 3 சான்றிதழ்களை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். சேவை கட்டணமாக ரூ.60-ஐ இணையதள வங்கி அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தி பொது மக்கள் அனைவரும் பயன் பெறலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார். 

    அப்போது அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 80 பெட்டிகளில் 800 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து  கொண்டுவரப்பட்டன.
     
    இந்த கட்டுப்பாட்டு கருவிகள் தாசில்தார் (தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம்) முத்துகிருஷ்ணன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு கருவிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டு, 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.
    கண்டராதித்தம் பெரிய ஏரியை தூர்வார கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    பாளையபாடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாளை.திருநாவுக்கரசு கலெக் டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் கண்டராதித்த சோழ மன்னரால் 416 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஆனால் தற்போது இந்த ஏரி முழுவதும் தூர்ந்து போய் உள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது. மன்னரால் வெட்டப்பட்டதற்கு பின்னர் இதுவரை இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. எனவே, இந்த ஏரியை, தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, கரைகளில் பூங்கா அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    அரியலூரில் உள்ள பொதுநல சங்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள செட்டி ஏரி வரத்து வாய்க்கால் மற்றும் 100 அடி சாலையை ஆக்கிரமித்து குடியிருப்பு வீடுகளை கட்டியுள்ளது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். இங்குள்ள 48 ஏக்கரில் மனைப்பிரிவு அமைத்து வீடுகளை கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செட்டி ஏரிக்கு நீர் வரத்துக்கு ஆதரமாக இருந்த குரும்பன்சாவடி வரத்து வாய்க்கால் முற்றிலும் ஆக்கிரமித்துள்ளதால், ஏரிக்கு வரவேண்டிய நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அருகிலுள்ள குடியிருப்புவாசிகள், தங்களது இடம் சாலை வரை உள்ளது என்று கூறி குத்துக்கல்லை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலை குறுகியுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடமும், அரியலூர் நகர வளர்ச்சி சங்கத்தினர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 961 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ராஜீவ் நகரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

    மேலும் அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை பணியான கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயனற்ற பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் தேங்கும் நீரினை உடனடியாக அகற்றி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

    இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், நல்லமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    ×